புகைக்கும் காட்சி வேண்டாம் – அஜீத்துக்கு அன்புமணி கடிதம்
அசல் திரைப்படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறுவதை அனுமதிக்க வேண்டாம்… அல்லது அந்தக் காட்சிகளில் புகைப் பழக்கத்துக்கு எதிரான வாசகங்கள் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளவும் என முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் அசல் படத்தின் கதாநாயகன் அஜித், தயாரிப்பாளர்கள் ராம்குமார், பிரபு, இயக்குநர் சரண் ஆகியோருக்கு எழுதிய கடிதம்:
சிறுவர்களையும், இளைஞர்களையும் புகை பிடிக்கும் கொடிய பழக்கத்துக்கு அடிமையாக்க சிகரெட் நிறுவனங்கள் முயல்கின்றன. இதற்காக திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா ஆகியோர் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளனர். ஏ.வி.எம். நிறுவனமும் தங்களது படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறாது என அறிவித்திருக்கிறது.
எனவே தமிழக இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி, அசல் படத்தில் மிகக் குறைவான காட்சிகளில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்குமானால், அவற்றில் புகைப்பழக்கத்துக்கு எதிரான வாசகங்கள் இடம்பெறுமாரு பார்த்துக் கொள்ளவும். அக்காட்சிகள் படத்தின் கதையம்சத்தில் முக்கியமில்லாததாக இருக்கும் எனில் அவற்றை நீக்கிவிடுங்கள்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று அசல் படத்தின் பேனர்கல் வைக்கப்பட்டிருந்த ங்கம் திரையரங்கம் முன்பு பாமகவினரும், பசுமை தாயகத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Link to this page