முரட்டு சிங்கம்..குழந்தைகளுக்கு தொப்பி பரிசு!
முன்பெல்லாம் புதிய படங்கள் நூறு நாள்களும் அதற்கு மேலும் ஓடுவது சகஜமான சமாச்சாரமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு வாரத்துக்கு சராசரியாக 5 படங்கள் வெளியாகி, அடுத்த வாரத்துக்குள் காணாமல் போகின்றன.
இந்த நிலையில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படம் 124 தியேட்டர்களில், 25 நாள்கள் தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், படம் பார்க்க வந்த அனைத்துக் குழந்தைகளுக்கும், படத்தின் 25 வது நாளையொட்டி இலவச கௌபாய் தொப்பி வழங்கப்பட்டது.
AGS எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி S.அகோரம் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், பத்மப்ரியா, சந்தியா மற்றும் லட்சுமிராய் நடித்துள்ள படம் இது.
38 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ள கௌபாய் படம் இது என்பதால், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் AGS நிறுவனம் இன்று அனைத்து தியேட்டர்களிலும் குழந்தைகளுக்கு மட்டும் கெளபாய் தொப்பியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. குழந்தைகள் மிகுந்த சந்தோஷத்துடன் தொப்பிகளைப் பெற்றுக் கொண்டனர்.
கமலா திரையரங்கில் மதிய காட்சியின் இடைவேளையில் ராகவா லாரன்ஸ், இயக்குனர் சிம்பு தேவன், நடிகர்கள் M.S.பாஸ்கர், சாம்ஸ் மற்றும் தியேட்டர் உரிமையாளர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தொப்பிகள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.

Link to this page