ஆர்யா மீது புகார்

ஆகஸ்ட் 9, 2010 | தமிழ் சினிமா | Tags:

நடிகர்களானாலும் ச‌ரி, தயா‌ரிப்பாளர்களானாலும் ச‌ரி, தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவது டப்பிங்கில்தான். நடிகர்களுக்கு கோபம் வந்தால் டப்பிங் பேசாமல் தவிர்ப்பார்கள். தயா‌ரிப்பாளருக்கு கோபம் வந்தால் டப்பிங்குக்கு அழைக்காமல் வேறொருவ‌ரின் குரலை பயன்படுத்துவார்கள்.

இந்தமுறை கோபம் வந்தது நடிகர் ஆர்யாவுக்கு. என்ன காரணமோ தெ‌ரியாது இரண்டுமுறை டப்பிங் ஸ்டுடியோவை புக் செய்துவிட்டு அழைத்தும் அவர் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அவர் உதாசீனப்படுத்திய படம் சிக்கு புக்கு.

எந்திரன் வருவதற்குள் படத்தை ‌ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தயா‌ரிப்பாளர்கள் வேலையை முடுக்கிவிட, ஆர்யாவோ டப்பிங் பேசாமல் முட்டுக்கட்டை போடுகிறார் என்பது அவர்களின் குற்றச்சாற்று. பிரச்சனை சங்கம் வரை சென்றுள்ளதால் சில சமாதான முயற்சிகளை எதிர்பார்க்கலாம்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat