ஜெர்மன் குழுவினருடன் ஏ ஆர் ரஹ்மான் இசை விருந்து… நேரில் ரசித்த ரஜினி!

ஜனவரி 27, 2012 | தமிழ் சினிமா

சென்னையில் ஜெர்மன் இசைக் குழுவினருடன் இணைந்து ஏ ஆர் ரஹ்மான் நடத்திய சிறப்பு இசை நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஜெர்மனியிலிருந்து 100 இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்காக பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்திய – ஜெர்மனி நாடுகளின் 60 ஆண்டு நட்புறவை கொண்டாடும் விதமாகவும், இந்திய குடியரசு தின விழாவையொட்டியும் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆண் பெண்கள் வயது வித்தியாசமின்றி ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது சூப்பர் ஸ்டார் ரஜினியின் வருகை. இளையமகள் சௌந்தர்யாவுடன் ரஜினி அரங்கில் நுழைந்ததும் மொத்த கூட்டமும் எழுந்து நின்று ஆர்ப்பரித்தது. விழாவுக்கு வந்து சிறப்பித்த ரஜினிக்கு வாழ்த்து சொன்னார் ரஹ்மான்.

ஒரு ஒபேரா போல நடைபெற்ற இந்த சிறப்பு இசை நிகழ்ச்சியில் ரஜினியின் எந்திரன், படையப்பா பட பாடல்கள் இசைக்கப்பட்ட போது கரவொலி அரங்கை அதிரவைத்தது.

ரஹ்மானின் ரோஜா, லகான், பம்பாய் போன்ற படங்களின் பாடல்களும் இசைக்கப்பட்டன.

நாட்டின் தேசிய கீதமான ஜனகண மண.. வை 100 இசைக் கலைஞர்களும் ஒருங்கே இசைத்தபோது, மக்கள் எழுந்து நின்று சிலிர்ப்புடன் அனுபவித்தனர்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

TamilWire.com Latest English News

Latest Songs Downloads

Latest Tamil Movie Trailers to Watch Online

123Tamilgallery.com Latest Tamil Galleries

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat